கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 40 கர்ப்பிணிகள் மரணம்


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 40 கர்ப்பிணிகள் மரணமடைந்துள்ளனர் என்று குடும்ப சுகாதார பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சத்ரமாலி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 5,500 கர்ப்பிணிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

வெவ்வேறு நோய்நிலைமைகளால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணகளே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்ப்பிணிகள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வதே சிறந்த வழியென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை