கொழும்பு தாமரை கோபுரத்தில் இன்றிரவு மின்விளக்குகள் ஒளிரவிடப்படவுள்ளது.
உலக நோயாளர்கள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டும், சுகாதார துறையை சேர்ந்த அனைவரையும் கௌரவிக்கும் முகமாகவும் தாமரை கோபுரத்தில் மின்விளக்குகள் ஒளிரவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்றைய தினம்(17) மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை இவ்வாறு மின்விளக்குகள் இவ்வாறு ஒளிரவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.