கியூபாவில் 2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் உலகில் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கிய முதல் நாடாக கியூபா திகழ்கிறது.
கியூபாவில் உற்பத்தி செய்யப்பட்ட அப்டலா மற்றும் சொபர்னா தடுப்பூசிகளே பயன்படுத்தப்படுகின்றன.
இதேவேளை கியூபாவின் தடுப்பூசிகளை உலக சுகாதார ஸ்தாபனம் இன்னமும் அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.