மட்டக்களப்பு பொலிஸாரின் அராஜக செயல்- தமிழர்கள் மீதான அடக்கு முறை தொடர்கின்றது

குடும்ப பிரச்சினை காரணமாக விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் ஒருவர் மீது மட்டக்களப்பு பொலிஸார் கடுமையான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியை சேர்ந்த ஜோ.மதன் என்ற குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனக்கு நடந்த சம்பவம் இனிமேல் யாருக்கும் நடக்க கூடாது எனவும் பொலிஸாரின் இந்த செயல் உடனடியாக நிறுத்தப் படவேண்டும் எனவும் தாக்குதல் நடத்திய பொலிஸாருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் சூழ்நிலையிலும் தமிழர்கள் மீதான அடக்கு முறை தொடர்ந்த வண்ணமே உள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை