நாட்டில் நேற்றைய தினம் மேலும் 20 கொரோனா மரணங்கள் பதிவானதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,674ஆக பதிவாகி உள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
30 வயதுக்குட்பட்ட யாரும் மரணிக்கவில்லை என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
