ஈ.பி.டி.பியின் துணையுடன் தமிழர் தாயத்தில் சிங்கள குடியேற்றம்

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உதவியுடன் வவுனியா மாவட்டத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்  குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரை நிகழ்த்திய அவர், தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை குறைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் காரமுனை பகுதியில் நேற்றைய தினம் சிங்கள மக்களுக்கு காணி வழங்குவதற்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டமைக்கும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
புதியது பழையவை