மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி

திருக்கோவில் சாகாமம் பகுதியில் நேற்று மாலை மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

 சம்பவத்தில் சாகாமத்தை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா  வயது 52  என்பவரே மரணமாகியுள்ளார்.

குறித்த நபர் தனது மகனின் வயலில் வரம்பு கட்டி கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கிய நிலையில் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

புதியது பழையவை