திருகோணமலை துறைமுகத்தில் இந்தியாவின் யுத்த கப்பல்கள்

இந்தியாவின் நான்கு யுத்த கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது.

இவ்வாறு இலங்கையை வந்தடைந்த இந்தியாவின் முதல் பயிற்சி படையணியின் 6 இந்தியக் கப்பல்கள் நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.என்.எஸ்.மகர் மற்றும் ஷர்துல் ஆகிய இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்குச் சென்றுள்ளதாகவும் ஐ.என்.எஸ்.சுஜாதா, தரங்கனி, சுதர்ஷினி மற்றும் சி.ஜி.எஸ். விக்ரம் ஆகிய நான்கு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதியது பழையவை