கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிய படகுகளை தரித்து நிற்கும் துறைமுகங்களை அமைக்கும் பணிகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு நேற்று(28) காலை விஜயம் செய்த அமைச்சர் அங்கு பல்வேறு சந்திப்புக்களை மீனவர்களுடன் நடத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்தியவிநாயகர் ஆலயத்திற்கு சென்று அங்கு வழிபாடுகளை மேற்கொண்டதுடன், ஆலய நிர்வாகத்துடனும் கலந்துரையாடி பெரியகல்லாறு பிரதேசத்தின் நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.


