நாட்டில் சடுதியாக குறைந்த கொரோனா உயிரிழப்பு

நாட்டில் நேற்று (16) கொரோனா தொற்றால் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 உயிரிழந்துள்ளவர்களில் 8 ஆண்களும் 4 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

அந்த வகையில் 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 2 ஆண்களும் ஒரு பெண்ணுமாக 3 பேரும் 6 ஆண்களும் 3 பெண்களுமாக 9 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,484 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை