மட்டக்களப்பு, வந்தாறுமூலை வேரத்தடி என்கின்ற தமிழர் பகுதியில் தொல்பொருள் செயலணி எல்லைக்கற்கள் நடும் முயற்சியில் இன்று (29)காலை ஈடுபட்டுள்ள நிலையில் குறித்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பகுதியில் தொல்பொருள் செயலணியினர் எல்லைக்கற்கள் நடுவதற்காக வந்துள்ள விடயத்தை அறிந்த வந்தாறுமூலை ஊர் மக்கள் உடன் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.



