ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நாளைய தினம் விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை பிற்பகல் ஐந்து மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து இதன்போது கவனஞ் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.
இந்த நிலையில், சீமேந்து, பால்மா மற்றும் சமையல் எரிவாயுக்களின் விலைகளை அதிகரிப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்து இதன்போது இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நேற்று இரவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அமைச்சரவை ஒன்றுகூடியுள்ளது.
எனினும், குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்காத நிலையில், நாளைய தினம் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெறவுள்ளது.