ஆசிரியர் தொழிற்சங்கங்கள் பிரதமரை சந்திக்கின்றன

வேதன முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய அலரிமாளிகையில் இன்று (12) மதியம் 12 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

அத்துடன் ஆசிரியர் – அதிபர்களின் வேதன முரண்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழுவின் உறுப்பினர்களும் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.
புதியது பழையவை