சர்வதேசரீதியில் சமூக வலைத்தள செயலிகள் முடங்கியுள்ளன


சர்வதேச ரீதியில் வட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசேன்ஜர் ஆகிய சமூக வலைத்தள செயலிகள் முடங்கியுள்ளன.

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களான இவை உலகளாவிய ரீதியில் முடங்கியதால் பயனாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இருப்பினும், மிக விரைவில் வட்ஸ்அப் மீண்டும் இயங்குமென வட்ஸ்அப் நிறுவனம் தனது ருவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது.

அந்த பதிவில் “சிலர் தற்போது வட்ஸ்அப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இந்த சிக்கல்களை தீர்த்து இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்றுள்ளது.

இதே போல பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் தொடர்பு நிர்வாக இயக்குநர் ஆண்டிஸ்டோன், தனது டுவிட்டர் தளத்தில் சிரமத்திற்கு மன்னிப்புக் கோருவதாக பதிவிட்டுள்ளார்.
புதியது பழையவை