வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது இன்று காலை பரந்தன் சிவபுரம் பகுதியில் பாழடைந்த தற்காலிக கொட்டகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சென்றுள்ளனர்.
குறித்த ஆணின் சடலமானது இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அப்பகுதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
புதியது பழையவை