இலங்கைக்கு 10 பில்லியன் டொலர் கடன் வழங்குமாறு சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தல்

இலங்கையின் ராஜபக்ஸ அரசாங்கத்துக்கு 10 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவதற்கு இந்தியா முன்வர வேண்டுமென பாரதிய ஜனாதாக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

சுப்ரமணியம் சுவாமி வௌியிட்டுள்ள டுவிட்டர் பதிவொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தில் இந்தியாவுக்கு நீண்ட கால நட்பு நாடொன்று காணப்பட வேண்டுமெனில் இந்திய அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு செயற்படவில்லையெனில் இந்து சமுத்திரத்தில் சீனாவுக்கு மற்றுமொரு நட்பு நாட்டை தாரை வார்க்க வேண்டிவரும் எனவும் சுப்ரமணியம் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நரேந்திர மோடி அரசாங்கம் சந்தித்துவரும் பல்வேறு வௌிநாட்டு கொள்கை தோல்விகளில் இதுவும் ஒன்றாக பதிவாகும் என அவர் கூறியுள்ளார்.
புதியது பழையவை