மட்டக்களப்பு -ஆரையம்பதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது

மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட விசேட குற்றவியல் விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று(17) மாலை ஆரையம்பதி, அம்மன் கோவில் வீதியிலுள்ள குறித்த வீட்டை மாவட்ட விசேட குற்றவியல் விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.

இதன்போது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட 44 வயதுடைய பெண்னை கைது செய்ததுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பை மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன், இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை