யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு கட்டளைத் தலைமையகத்தின் 27வது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ். செனரத் யாபா சகல மத வழிபாட்டுடன் சம்பிரதாயபூர்வமாக பதவியேற்றார்.
இதன்போது இராணுவ அணிவகுப்பும் இராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.
அவர் கடமையேற்கும்போது பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் முன்னால் மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.