யாழ்-பல்கலைக்கழகத்தில் சுனாமி நாள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு


இலங்கையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையால் காவு கொள்ளப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று(26) யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

17வது ஆண்டு நிறைவையொட்டி இந்த நினைவேந்தல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலை வளாகத்தில் ஆத்மாத்த ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த அனர்த்தம் ஈடுசெய்ய முடியாத பல உயிர்கள் மற்றும் உடமைகள் இழப்புக்களை ஏற்படுத்தி அனைவரது மனதிலும் நீங்காத ஒரு வடுவாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை