கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
தலதா மாளிகைக்கு விஜயம் செய்த பிரதமரை தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல வரவேற்றார். அதனை தொடர்ந்து பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்.
வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து பிரதமர் மல்வத்து மஹா விகாரை பீட மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
அனுசாசனத்தை தொடர்ந்து வணக்கத்திற்குரிய தேரர் அவர்கள் கௌரவ பிரதமருக்கு புத்தர் சிலையொன்றை பரிசளித்தார்.
வழிபாட்டில் பிரதமருடன் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, லொஹான் ரத்வத்தே, நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா பண்டார, குணதிலக ராஜபக்ச, உதயன சாமிந்த கிரிந்திகொட, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல உள்ளிட்ட மக்கள் பிரதிநிகள் பலர் கலந்து கொண்டனர்.