ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு 12 வருடங்களாகியும் நீதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரது மனைவி சந்தியா எக்னலிகொட இன்று(25) கொழும்பு முகத்துவாரம் காளி கோவிலில் தனது தலைமுடியை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
தனது கணவர் காணாமலாக்கப்பட்டமைக்கு நீதியைப் பெற்றுத்தருமாறு கோரி அவர் காளி கோவிலில் முடி காணிக்கை செலுத்தியுள்ளார்.