யாழ்ப்பாணம் சுப்பர்மடம் பகுதியில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் அத்துமீறல் காரணமாக தமது தொழில் மற்றும் வளங்கள் சூறையாடப்படுவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.