திருகோணமலையில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர் மழைக் காரணமாக திருகோணமலை , கிண்ணியா, தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரம் உட்பட பல கிராமங்கள் நீரினால் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.




