மட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பால் கடற்தொழிலாளர்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான கடற்பகுதிகளுக்கு கடற்தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லவில்லை என தெரியவருகிறது.

தற்போதைய நிலையில் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படுவதனால் தம்மால் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தமது தோணிகளைக் கரையேற்றி வைத்துள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தின் களுதாவளை, தேத்தாதீவு, மாங்காடு, செட்டிபாளையம், களுவாஞ்சிகுடி, ஓந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள கடற்தொழிலாளர்களே இந்நிலைமையை எதிர்கொண்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
புதியது பழையவை