மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான கடற்பகுதிகளுக்கு கடற்தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லவில்லை என தெரியவருகிறது.
தற்போதைய நிலையில் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படுவதனால் தம்மால் தொழிலுக்குச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தமது தோணிகளைக் கரையேற்றி வைத்துள்ளதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

