நாளையும் இருளில் மூழ்கும் நாடு–வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

நாட்டில் நாளைய(01-04-2022 ) தினம் 12 மணித்தியால மின்விநியோகத் தடையை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய A முதல் F வரையான வலயங்களிலும், G முதல் L வரையான வலயங்களிலும் இவ்வாறு மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், P முதல் S வரையான வலயங்களிலும், T முதல் W வரையான வலயங்களிலும் இவ்வாறு 12 மணித்தியால மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பில் அமைந்துள்ள கைத்தொழில் வலயங்கள் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு உரித்தான M முதல் Z வரையான வலயங்களில் 5 மணித்தியாலமும் 30 நிமிடங்களும், CC வலயத்தில் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
புதியது பழையவை