ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் அரச தலைவரின் செயலகத்தினுள் சவப்பெட்டியை வீசியுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் கண்டித்து எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.
இதன் போது அரச தலைவர் கோட்டாபயவின் ஆட்சியை எதிர்த்து கடுமையான கோசங்கள் எழுப்பப்பட்டன.
பாரிய மக்கள் ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் காலி விதி ஊடாக அரச தலைவரின் செயலகம் வரை சென்று செயலகத்தினுள் சவப்பெட்டியை வீசியுள்ளனர்.

