சட்டமா அதிபர் திணைக்களத்தை முற்றுகையிட்ட சட்டத்தரணிகள்

சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு முன்னால் சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சில முக்கியமான வழக்குகளை மீளப்பெறும் சட்டமா அதிபரின் முறைக்கு எதிராக அவர்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக விரக்தியடைந்த மக்கள் நாடுமுழுவதும்  போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

பொதுமக்கள் என்ற வகையில் கலைஞர்கள், மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் என அனைவரும் தங்கள் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

புதியது பழையவை