யாழ் - பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் 18 பேருக்கு தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக புதுமுக மாணவர்களை ஒன்றுகூடல் எனக் கூறி காங்கேசன்துறைப் பகுதிக்கு அழைத்து பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை அடுத்து பல்கலைக்கழக உள்ளக விசாரணையை தடையின்றி மேற்கொள்ளவே 18 மாணவர்களுக்கும் தற்காலிக வகுப்புத் தடை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை