கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டமானது இன்று காலை 8 மணியுடன் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய அரசை பதவி விலகுமாறு கோரி நாடாத்தப்பட்டு வரும் போராட்டம் தீவிரம் அடைந்த காரணத்தால் கொழும்பின் பல பகுதிகளுக்கு நேற்று இரவு 9 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.