38.36 கிலோ கிராம் ஹெரோயினை வைத்திருந்த இருவர் எம்பிலிப்பிட்டியவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்பிலிபிட்டிய, இரண்டாவது ஒழுங்கில் உள்ள வீடொன்றில் 36 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 46 வயதுடைய தாய் மற்றும் அவரது 22 வயது மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளறும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
