புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம்

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாக ‘மனுசவி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் திங்கட்கிழமை (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நீண்டகால அபிலாஷையை நிறைவேற்றும் வகையில் ‘மனுசவி’ ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் ஓய்வு கால வாழ்க்கையை வலுப்படுத்தும் வகையில் ‘மனுசவி’ சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு தொழிலாளியின் உயிரையும் பாதுகாக்கும் வகையில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை விரைவில் தொடங்கவுள்ளதாக அமைச்சர் உறுதியளித்தார்.
புதியது பழையவை