தீபாவளி திருநாளை முன்னிட்டு- மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை


தமிழர்களின் தீபத்திருநாளாம் தீபாவளி திருநாளை முன்னிட்டு இன்று (24-10-2022)திங்கட்கிழமை காலை ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்கள் தலைமையில் தீபாவளி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதன்போது நாட்டிற்கு நன்மைவேண்டியும் நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கநிலை நீங்கி நாடு சுபீட்சமடையவும் விசேட யாகம் மற்றும் அபிசேகமும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை