இலங்கையின் புகழ்பூத்த எழுத்தாளர் மட்டக்களப்பின் இலக்கிய கலாநிதி புலவர்மணி பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளையின் 44 ஆவது நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இலக்கிய கலாநிதி புலவர்மணி பண்டிதமணி பெரியதம்பிப்பிள்ளையின் 44 ஆவது நினைவுதினத்தை முன்னிட்டு புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவு மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பு புளியந்தீவு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சிலைக்கு அருகாமையில் இடம்பெற்றது.
‘உள்ளதும் நல்லதும்’ எனும் இலக்கிய நூல் மூலம் இலக்கியத்துறையில் சஞ்சரித்து பல இலக்கியநூல்களையும்,தமிழ்மொழி சார்ந்த சஞ்சிகைகளையும்,நூல்களையும் உருவாக்கி தமிழ்த்துறைக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளார்.1899.1.8 மண்டூர் மண்ணில் அவதரித்த இவர் 1978.11.2ஆந் திகதி இலக்கியத்துறையில் இருந்து விடைபெற்று இயற்கை எய்தினார்.
இவ் நினைவுதினத்தில் அன்னாரின் இலக்கியப்பணி, சமூகசேவை, கல்விப்பணிகள் பற்றி பேசப்பட்டதுடன் அன்னாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி 44ஆவது சிரார்த்ததினம் அனுஸ்டிக்கப்பட்டது.இதன்பின்னர் ஒரு நிமிட மௌன இறைவணக்கம்,மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வானது கிழக்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரும்,குடும்ப உறுப்பினருமான பேராசிரியர் சி.சந்திரசேகரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி-யோகேஸ்வரன்,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன்,அமரர் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் மகன் பெ.சத்தியலிங்கம்,முன்னாள் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர்களான க.பாஸ்கரன்,எஸ்.எஸ்.மனோகரன், முன்னாள் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர்களான மு.விமலநாதன்,கே.அருட்பிரகாசம், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.
இவ்வாறு இலக்கியத்துறைக்கு பாரிய பங்களிப்பு செய்த புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் நினைவு மன்றத்தின் கோரிக்கை அமைவாக மட்டக்களப்பு மாநகரசபையின் ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாநகரசபையின் எல்லைக்குட்பட்ட யாட் வீதியை இலக்கிய கலாநிதி புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை வீதியாக பெயர்மாற்றப்பட்டுள்ளது.