மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு வாவியில் குதித்தவரை தேடும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று (14)காலை பெரியகல்லாறு பாலத்திலிருந்து குடும்பஸ்த்தர் ஒருவர் குதித்த நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோட்டைக்கல்லாறை சேர்ந்த சங்கரப்பிள்ளை நிரோஜன் என்பவரே இவ்வாறு வாவியில் குதித்;த நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மீனவர்களின் உதவியுடன் இந்த தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.