கொழும்பில் புலம்பெயர் கனேடிய தமிழ் முதலீட்டாளர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சடத்தரணியுமாகைய சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது இலங்கையில் தமிழ் கனேடிய புலம் பெயர் மக்கள் முதலீடூ செய்ய எடுத்த முடிவை சம்பந்தன் பாராட்டினார்.
நாட்டுக்கும் தமிழர் தேசத்துக்கும் முதலீடுகள் அவசியம். ஆகவே இந்த முதலீடூகள் தமிழர் தாயகத்துக்கும் வரப்பிர
சாதம்தான். இதன் மூலம் எமது தமிழர் தாயாக விருத்திக்கும், எமது மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிட்டும்.
ஆனாலும். நாட்டின் பொருளாதார முயற்சி என்பது வெறுமனே வெளிநாட்டு முதலீடூகள் மூலம் மட்டும் எட்டிவிட முடியாது. நாடு தன்னை அபிவிருத்தி செய்வதற்கான உள்ளக சூழலையும் ஏற்படுத்த வேண்டும் . தேசிய இனப்பிரச்சினையை மோசமாக கையாண்டதன் விளைவுதான் இந்த பொருளாதார பிரச்சினை மற்றும் நெருக்கடி.
ஆகவே. இதிலிருந்து மீள்வதாயின் முதலில் தேசிய இனப் பிரச்சினைக்கும் இணக்கமான ஒரு தீர்வு காணப்பட
வேண்டும்.
அத்தகைய சூழலில்தான் பொருளாதார மீட்சியும் சாத்தியமாகும். எனவே நமது தாயகத்தில் முதலீடு செய்யும் அதே சமயத்தில். அந்த முதலீடு மூலம் நாடு பொருளாதார மீட்சி பெறுவதோடு வெளிநாட்டு முதலீட்டுக்கும் தேசிய இனப் பிரச்சினைத் தீர்வுக்கும் உள்ள பிரிக்க முடியாத இணைப்பைப் புரிந்து கொண்டு. அதன் அடிப்படையில் முதலீடுகளைநீங்கள் முன்னெடுக்க வேண்டும். என வலியுறுத்தப்பட்டது.