கெமுனு படைப் பிரிவின் முதலாவது தமிழ் இராணுவ உத்தியோகத்தர் காலமானார்!

இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட கெமுனு இராணுவ அணியின் முதலாவது படைப்பிரிவில் இணைந்த தமிழ் இராணுவ உத்தியோகத்தரான விஸ்வலிங்கம் காலமானார்.

அவர் நேற்று (01.11.2022) தனது 90வது வயதில் காலமானார்.

1932ம் ஆண்டு கைதடியில் பிறந்த விஸ்வலிங்கம் 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கெமுனுப் படைப்பிரிவின் இணைந்து கொண்டார்.

பயிற்சி சிப்பாயாக இணைந்து கொண்ட விஸ்வலிங்கம் தியத்தலாவ இராணுவ முகாமில் தனது ஆரம்ப பயிற்சியை முடித்தார்.

அதன் பின் கெமுனுப் படை அணியில் உள்வாங்கப்பட்டு திறமை உள்ள ஒரு அதிகாரியாக லான்ஸ்கோப்ரல், கோப்ரல், சார்ஜன்ட் மற்றும் வர்ண சார்ஜன்ட் ஆகிய பதவி நிலை அதிகாரியாக தரம் உயர்த்தப்பட்டார்.

இராணுவ சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கைதடியில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வந்த நிலையில் இயற்கையை எய்தினார்.

அவரது இறுதிச் சடங்கு கெமுனுப் படை பிரிவு குண்டு மழை பொழிய இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை