அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனையில் முதலை இழுத்துச் சென்ற இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (23) மாலை மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற நிலையில் காணாமல் சென்றிருந்தார்.
இச்சம்பவமானது அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் இடம்பெற்றிருந்தது.
கிட்டங்கி வாவியில் மாடுகள்
மாடுகள் கிட்டங்கி வாவியில் இறங்கி நிற்பதாக நண்பன் தெரிவித்ததற்கமைய குறித்த இளைஞன் மாடுகளை கரையேற்றுவதற்காக வாவியினுள் இறங்கிய நிலையில் முதலை பிடித்து இழுத்து சென்றுள்ளது.
முதலை பிடியினால் காணாமல் போனவர் சேனைக்குடியிருப்பு 1 பிரிவு 157 விக்னேஸ்வரன் வீதியை சேர்ந்த சுகிர் பிரதாஸ் (வயது-30) என்பவராவார் இதனையடுத்து பொதுமக்களுடன் கடற்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதலை மேற்கொண்டிருந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுதுடன் முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக அறிவுறுத்துதல்கள் எச்சரிக்கை பலகைகள் எதுவும் வைக்கப்படவில்லை உள்ளூர்வாசிகள் விசனம் வெளியிட்டுள்ளது.