2022 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வழங்கப்பட்ட உதவியால், அடிப்படை உணவுப் பாதுகாப்பு, மாணவர்களுக்கான மதிய உணவு, விவசாயிகளுக்கு உரம் போன்றவற்றுக்கு உதவியாக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பண உதவி உள்ளிட்ட மிகவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளை நிவர்த்திகூடியதாக அமைந்தது என அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார்.
இந்த உதவியானது அரசாங்கம், தனியார், சிவில் சமூகம் மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து பணியாற்றும் தமது பங்காளித்துவத்தை எடுத்துக்காட்டுவதாக ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.