அடுத்த 36 மணிநேரத்திற்கு வானிலை தொடர்பில் பொது மக்களுக்கு முக்கிய முன்னறிவிப்பு அறிவுறுத்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 31 மற்றும் பெப்ரவரி 01 ஆம் திகதிகளில், நாடளாவிய ரீதியில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையிலான மிக பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோரியுள்ளது.