அரச உத்தியோகத்தர்களை ஏற்றி சென்ற பேருந்து - இடைமறிக்கப்பட்டதால் குழப்பம்!



யாழ்ப்பாணத்திலிருந்து, முல்லைத்தீவுக்கு அரச உத்தியோகத்தர்களை ஏற்றி சென்ற பேருந்து ஒன்றை, இன்று பரந்தன் சந்தி பகுதியில் வைத்து தனியார் போக்குவரத்து சங்கத்தினரால் இடைமறிக்கப்பட்டதால், அமைதியின்மை ஏற்பட்டது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் சேவையாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கான போக்குவரத்துக்களை சீர் செய்யக் கூடிய வகையில், வழமை போன்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களை இன்று காலை ஏற்றி வந்த அரச பேருந்தை, ஏ-35 வீதியின் பரந்தன் சந்திப் பகுதில் வைத்து தனியார் போக்குவரத்து சங்க நிர்வாகத்தினர் வழி மறித்து பேருந்தை தடுத்து நிறுத்தியதால், அங்கு அமைதியின்மை ஏற்பட்டதுடன் கடமைக்கு சென்ற அரச உத்தியோகத்தர்களும் நீண்ட நேரமாக தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சம்பவ இடத்திற்கு விரைந்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், குறித்த பேருந்து சேவை தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் எந்தவித முறைப்பாடுகளும் செய்யாது இவ்வாறு பேருந்துகளை வழி மறிப்பது சட்டத்துக்கு புறம்பானது என்று தெரிவித்து சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்தனர்.
புதியது பழையவை