கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பம்



2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று 23-01-2023 திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகி பெப்ரவரி 17ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது.


இதேவேளை இவ்வருடம் 331,709 பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் இவை நடைபெற உள்ளது.

அத்துடன் பரீட்சை நிலையங்களின் பாதுகாப்பிற்காக விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை