திவுலப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் சிறைச்சாலையின் பூட்டை உடைத்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தப்பிச்சென்ற கைதி ஹெரோயினுடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என குறிப்பிடப்படுகிறது.