யாழில் - சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி ஆரம்பம்



வடக்கு, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுடன் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணியும் ஆரம்பமாகியுள்ளது.

இந்த பேரணி இன்று (04.02.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.


தமிழர் தயகத்தின் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து, தடைகளை உடைப்போம், அபகரிக்கப்பட்டுள்ள எமது நிலங்களை திருப்பிக்கொடு, தமிழர் தேசம் எமது அடையாளம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 


யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்த இந்த எதிர்ப்பு பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பேரெழுச்சியாக கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை