திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை



1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 27 ஆண்டுகளாகின்றன.


வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவர்கள், பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு 20 வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில், 2016ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் சிங்கள ஜூரிகள் கொண்ட சபையால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இத்தனைக்கும் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இராணுவத்தினரை அடையாளம் காட்டியிருந்த போதும் அவர்களுக்கு நீதிகிடைக்கவில்லை.

தற்போது நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் காலத்திலேயே இப்படுகொலை அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை