மட்டக்களப்பு மாவட்டச் செயலக, பிரதம கணக்காளருக்கு பதவியுயர்வு!



மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதம கணக்காளராக கடமையாற்றி வந்த இந்திராவதி மோகன், வெகுசன ஊடக அமைச்சின் தலைமை நிதி அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்ட நிலையில், இவருக்கான பாராட்டு மற்றும் பிரியாவிடை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில், மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது.

1989ம் ஆண்டு வடகிழக்கு மாகாண சபையின் நீர்ப்பாசன மற்றும் வீடமைப்பு அமைச்சில் முதல் நியமனம் பெற்று அரச சேவையில் இணைந்து கொணட இந்திராவதி மோகன், 1992ம் ஆண்டு கணக்காளர் சேவையில் இணைந்து கொண்டு, ஏறாவூர் நகர் பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி திணைக்களம், கிழக்கு மாகாண திறைசேரி ஆகியவற்றில் கணக்காளராக கடமையாற்றியதோடு, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பிரதி உள்ளக கணக்காய்வாளராக கடமையாற்றி, 2022 ஆம் ஆண்டு பிரதம கணக்காளராக பதவியுயர்வு பெற்றிருந்தார்.


அரச கணக்கியலில் டிப்ளோமா, சமூகவியல் முதுமாணி, அபிவிருத்தி பொருளாதார முதுமணி பட்டங்களை பெற்றுள்ள இந்திராவதி மோகன் தற்போது வெகுசன ஊடக அமைச்சின் தலைமை நிதி அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை