இந்தோனேசியாவின் அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!



இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளுக்கு அருகில் உள்ள கடலில் 7.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் பணியகம் இது தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவுகள் அருகே துபன் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் வலிமையால் சுனாமி அபாயம் உள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என அமெரிக்க புவியியல் பணியகத்தின் இணையதளம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை