மட்டக்களப்பு - அரசடித்தீவு சக்தி இல்லத்திற்கு முன்பாக அன்னை பூபதி தாயாருக்கு மலரஞ்சலி!


தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த தியாகத்தாய் அன்னை பூபதி தாயாரின் நினைவு ஊர்தி வடக்கில் ஆரம்பிக்கப்பட்டு கிழக்கை வந்தடைந்தது.

இன்று 18-04-2023 மட்டக்களப்பு - அரசடித்தீவு சக்தி இல்லத்திற்கு முன்பாக அன்னை பூபதி தாயாருக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு வணக்கமும் இடமைபெற்றது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் முன்னால் மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் சி.புஸ்பலிங்கம் மற்றும் இளைஞர்கள் யுவதிகள் கலந்துகொண்டு அன்னை பூபதி அம்மாவிற்கு அஞ்சலி செலுத்தப்படது.




புதியது பழையவை