செங்கலடியில் அமைந்துள்ள மீன் சந்தை கட்டிட தொகுதியை கிழக்கு ஆளுனர் திறப்பு - புறக்கணிக்கும் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு!


நாளை 01.06.2023 அன்று மட்டக்களப்பு  செங்கலடியில் அமைந்துள்ள மீன் சந்தை கட்டிட தொகுதியை ஆளுனர் திறந்து வைக்கும் நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டு ஆளும் கட்சி ராஜாங்க அமைச்சர்களும் அழைக்கப்பட்டு இரண்டு தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் புறக்கணிக்கப்பட்டதானது ஏற்கக் கூடியது ஒன்றல்ல 

அதேவேளை அவர்களும் இப்பிரதேச மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அத்துடன் அவர்கள் எந்த நிலையிலும் அபிவிருத்திக்கு எதிரானவர்களும் அல்ல 

இப்படியான நிலையில் அவர்களை புறக்கணித்தது ஏற்கக்கூடிய ஒன்றல்ல தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவரையும் இந்நிகழ்விற்கு அழைத்துள்ள நிலையில் இச் செயற்பாட்டை கண்டித்து தமிழ் உணர்வாளர்கள் அமைப்பும் இந்நிகழ்வை புறக்கணிக்கின்றது.
புதியது பழையவை