ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதற்காக, தமிழ்த் தரப்புக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்காது
நேர்மையுடன் செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.