மட்டக்களப்பு திருபழுகாமம் கலாசார மண்டபத்தில் நடமாடும் சேவைகள்



கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவை திணைக்களங்களின் சேவைகளை ஒன்றிணைத்து வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் அனுசரணையில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ராகுலநாயகிவழி நடத்தலில் இன்று (04-07-2023) திருபழுகாமம் கலாசார மண்டபத்தில் நடமாடும் சேவை நடைபெற்றது.


போரதீவுப்பற்று பிரதேச செயலக சமூக சேவை பிரிவுக்கான சேவைகள், காணி, பதிவாளர், தேசிய அடையாள அட்டை மற்றும் சமுர்த்தி போன்ற பிரிவுகளுக்கான சேவைகள் உட்பட வலது குறைந்தவர்களுக்கான சேவை, முதியோர்களுக்கான சேவை, மூக்கு கண்ணாடி சேவை, ஆயுர்வேத மருத்துவ சேவை, உளநல மருத்துவ சேவைகள், பற்சிகிச்சை முகாம் போன்ற சேவைகள் இடம் பெற்றதுடன், போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் உடல் திணிவுச் சுட்டெண், நீரிழிவு பரிசோதனைளும் இடம் பெற்றன.


இதன் போது பங்கு பற்றியோருக்கு இலைக்கஞ்சி வழகங்கப்பட்டது.
நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் துலஞ்சனன், போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள், போரதீவுப்பற்று சமுர்த்தி தலைமையக முகாமையாளர், என பலர் கலந்துகொண்டனர்.



புதியது பழையவை